வாழ்விற்கான வைத்தியங்கள்

நமது தொழில் குழந்தைகளுடன் தனவுவது.

அண்மையில் ஒரு விழாவில் எனக்கு நன்கு அறிமுகமாகிய சிறுமியொருத்தி முகத்துக்கு, உதட்டுக்கு, நகங்களுக்கு நிறமள்ளிப் பூசிக்கொண்டு ஒரு குட்டித்தேவதையாய் வந்திருந்தாள். அவளுக்கு வயது 8-9 தான் இருக்கும்.

அவள் நண்பிகளுடன் என்னைக் கடந்தபோது..

“அம்மாச்சி, ஏனம்மா உதட்டுக்கு நெயில் பொலிஸ்ம், நகத்திற்கு லிப்ஸ்டிக்கும் அடித்திருக்கிறீங்க” என்று தொழிலை ஆரம்பித்தேன்.

அவளின் நண்பிகளும் இதைக் கேட்டார்கள்.

இவள், நக்கலாக பெரிதாக சிரித்தபடியே... நண்பிகளை அழைத்து..

“பெரிய பகிடி விட்டுட்டாராம்.... சிரியுங்கடி” என்று கூறியதல்லாமல் கண்ணை, மூக்கை, வாயை, நாக்கை நெளித்துக் காட்டிவிட்டு கல கல என்று சிரித்தபடியே மறைந்தாள்.

சிங்கம் அசிங்கப்பட்டதை யாராவது பார்த்தார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.
எவரும் காணவில்லை.

ஆனால்

அருகில் இருந்து அலட்டிக்கொண்டிருந்த ஒரு குட்டிப்பிசாசு வாயைப்பொத்தி சிரித்துக்கொண்டிருந்தாள்.

வாரங்கள் ஆனபின்பும் அதை நினைத்துக்கொண்டிருக்கிறேனே... ஏன்?

இப்படியான சம்பவங்களில்தான் வாழ்விற்கான வைத்தியம் இருக்கிறது.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்