ஆத்தாவின் அன்னையர் தினம்

காலையில்  இருந்து அத்தாவுக்கு தொலைபேசி எடுக்கிறேன். பதிலே இல்லை.

மருகமனிடம்  ”டேய்! அமம்மம்மா  எங்கடா? அன்னையர் தின party என்று கிளம்பிவிட்டாவா? என்றேன்.

”இன்று ஞாயிற்றுக்கிழமை. பிரம்மகுமாரிகள் ஆச்சிரமத்தில நிற்பா” என்றான்.

சரி... இனி எங்கட குமாரி  வீடுவரும் வரையில் காத்திருக்கவேண்டியதுதான்.

பிரம்மகுமாரியின் இம்சை தாங்க முடியவில்லை.

சென்ற ஆண்டு அம்மாவுடன் தங்கியிருந்தபோது.. .”ராசா,  இது உனக்குத்தான் என்று ஒரு பயணப் பை  தந்தார். அதனை திறந்து பார்த்தேன்.

பாபாவின்  படத்துடன் 2 திறப்புக்கோர்வை.
பாபாவின்  படத்துடன் 2 கொப்பி
பாபாவின்  படத்துடன் 4 பேனைகள்
பாபாவின்   பெரிய படம் ஒன்று
பாபாவின்  படத்துடன்  பாபாவின்  அருள் மொழிகள் புத்தகம்
பாபாவின்  படத்துடன் கலன்டர்

எல்லாவற்றையும் பார்த்துவிட்டு செம கடுப்புடன் பயணப்பையை  மூடுகிறேன். பயணப்பையிலும் பாபா பல்லைக்காட்டிக்கொண்டு இருக்கிறார்.

நிமிர்ந்து, கிழவியை ஒரு பார்வை பார்த்தேன்.
அவருக்கு  புரிந்திருக்கவேண்டும் ”உனக்கு வேண்டாம் என்றால் நீ  எடுக்க வேணாம்” என்றார்.

நோர்வேக்கு வரும்போது பாபாவின்  படத்துடன் 2 திறப்புக்கோர்வையும், ஒரு பேனையும், அந்த பயணப்பையையும் எடுத்தேன்.

கிழவியின் முகம் பூப்போல  மலர்ந்தது.

இன்னொரு நாள், அம்மா ஆச்சிரமத்துக்கு புறப்பட்டுகொண்டிருந்தார்.

”அம்மா” என்று தேன் ஒழுக அழைத்தேன்.

” என்னடா” என்றார் அன்பாக

”நானும்,  உங்களுடன் ஆச்சிரமத்துக்கு வரவா?” என்றேன்.

” உன்னை கும்பிட்டுக் கேட்கிறேன். அங்க வந்து கனபேரின் நிம்மதிய கெடுக்காதே. நீ விசர்க் கேள்வி எல்லாம் கேட்பாய” என்று மண்டாடினார்.

” சரி சரி  ..பாபா பாபா என்று  ஊரை ஏமாற்றுகிறீர்கள்” என்றேன்.

அம்மாவுக்கு அருகில் இருந்த ஒரு அகப்பை காற்றில்  ஏவுகணைபோன்று வந்கொண்டிருந்து.


No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்