இரவு ஒரு அற்புதமான நண்பரைச்
சந்தித்தேன். மிகவும் கலகலப்பானவன். அவனுடன் இணைந்தாவே காலம் மகிழ்ச்சியாக
கரைந்துவிடும். எமக்கிடையிலான அறிமுகம் கிடைத்து ஒரு 4 - 5 வருடங்கள்தான்
இருக்கும்.அடிக்கடி பறந்து திரிபவன் அவன். விமானி போன்றவன்.
ஒஸ்லோவிலதான் அறிமுகமானோம். வாய்க்குள் நூளையாத பெயரைக்கொண்டவன் அவன். பெயர் ஜக். ஆங்கிலத்தில் Jack என்று எழுதுவான்.
இவனுடைய பெயரில் எனக்கு அறிமுகமான ஒரு தம்பி இருந்தான். அவன் நோர்வேக்கு வருவதற்கு அவனது உறவினர்கள் ஒரு நோர்வேஜியப்பெண்ணுக்கு அவனை திருமணம் செய்வதுபோன்று ஒரு திருவிளையாடலை நடத்தியே அழைத்துவந்தனர். தம்பிக்கு அந்தப் பெண்ணைக் கண்டால் கறுத்த முகமும் சிவந்துவிடுமளவுக்கு வெட்கம் வரும். அவள் அவனிடம் இருந்து லட்சங்களை கறந்துகொண்டே இருந்தாள் இவனுக்கு வீசா கிடைக்கும்.வரையில்.
வீசா கிடைத்ததும் தம்பி பேசாமல் இருந்திருககலாம். உறவினர்களுடன் ஏதோ மனஸ்தாபமாகிவிட்டது. நடந்தது பொய்க்கல்யாணம் என்று போலீசுக்கு உறவினர்கள் அறிவிக்க, தம்பி இப்போது இலங்கையில்.
ஆனால் அங்கு அவன் சென்று 4 ஆண்டுகளுக்குள் வக்கீலாக கற்றுத்தேறிவிட்டான். கல்யாணமாகி ஒரு குட்டியும் போட்டிருக்கிறான். இங்கிருந்து ஊர்க்கு செல்லும் உறவினர்கள் அடக்கியயே வாசிப்பதாகவும் கதையுண்டு. எல்லாம் விதி.
கூற வந்ததை மறந்துவிட்டு தம்பியின் கதையை கூறிக்கொண்டிருக்கிறேன். மன்னியுங்கள்.
பல காலங்களின் பின் சந்தித்ததால் நண்பரை எனது மாளிகைக்கு அழைத்துவந்தேன். எனது வசந்தமாளிகையில் சொகுசு இருக்கை ஒன்று கூட இல்லை. இருப்பது ஒரே ஒரு கட்டில். ஆனால் அதை சொகுசு இருக்கையாக மாற்றலாம். மாற்றினேன்.
எனக்கு உணவுதயாரிப்பது என்பது நேரத்தை வீணாக்குவது போன்றது. அந்த நேரத்தை மிச்சப்படுத்தி தூங்கலாம் என்பது எனது நம்பிக்கை. எனவே அவ்வப்போது கடையில் உணவு வாங்குவேன். அல்லது டின் மீன்னையும் பாணையும் சாப்பிட்டுவிட்டு சரிந்துவிடும் மனிதன் நான். இன்று அதிஸ்டவசமாக நண்பரை சந்திப்பதற்கு முன் உணவு வாங்கியிருந்தேன். இறால் நூடில்ஸ். இருவருக்கும் அது காணுமாய் இருக்கலாம் என்று நம்பிக்கை இருக்கிறது. .
பலதையும் பேசி, மிக்சரை கொறித்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்கையில் ஒரு குறுஞ்செய்தி வந்தது.மிக மிக கடுப்பேத்தும் செய்தி. அதற்குப்பின் 100க்கு அதிகமான குறுஞ்செய்திகள் பரிமாறப்பட்டன. அனைத்தும் எறிகணைத்தாக்குதல் போன்றதே. உயிரிழப்பு இல்லாவிட்டாலும் இருபக்கத்திலும் மனச்சேதம். இதையும் பார்த்துக்கொண்டிருந்தான் நண்பன்.
எனது கோபத்தை அவன் நன்கு அறிந்தவன் என்பதால் அவன் சாப்பாட்டில் கவனமாக இருந்தான்.இடையிடையே என்னைப் பார்த்துச் சிரித்தான். எனக்கு அவனைப்பார்த்து சிரிப்பதா, கோபமாகவே இருப்பதா என்று தெரியவில்லை. மரியாதைக்காக தலையை மட்டும் ஆட்டினேன்.
தூக்கம் வருவதுபோலருந்தது. அதற்குப்பின் இன்று மதியம் 13:25வரை இந்த பூலோகத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு நினைவில் இல்லை. ”நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்” படத்தைப் போன்று.
இடையில் ஒரு முறை எழும்பியதாய் நினைவிருக்கிறது. அதன் பின்பும் தூங்கிவிட்டேன்.
இதன் பின்புதான் அந்த உலக அரசியலையே உலுக்கிப்போடும் அந்த மிக முக்கியமான கனவு எனக்கு வந்தது.
நோர்வே www.vg.no என்னும் பத்திரிகை சுவிஸ் நாட்டை ரஸ்யப்படைகள் கைப்பற்றி அங்கிருந்து ஏனைய நாடுகளையும் கைப்பற்றிவருகிறார்கள் என்று செய்தி போட்டிருந்தது.
நான் எனது சுவிஸ் நண்பர்களை நினைத்துக்கொண்டேன். இருவரில் பரிதாபமே வரவில்லை. ஒருவர் கவிஞி மற்றையவர் கடலில் கப்பல் என்று கதை எழுதியவர்.
ஒரிரு நாட்களில் அமெரிக்கப்படைகள் நேட்டோ படைகளுடன் சேர்ந்து சுவிசை மீட்டு எடுக்கின்றன. எனது நண்பர்களான கவிஞியையும், இத்தாலிக்கு கப்பல் விட்டவனும் தப்பிவிடுறார்கள்.
Putinஐ காணவில்லை என்று பத்திரிகைள் எழுதுகின்றன. இணையத்தளங்கள் எங்கே இருக்கலாம் என்று ஊகித்து எழுதுகின்றன. தமிழ் ஊடகங்கள் அவர் இலங்கையில் என்று எழுதுகின்றன.
பூட்டினைக் காணவில்லை. சத்தியமாகக் காணவில்லை. சதாம் உலகத்தைக் கலக்கியது போன்று பூட்டினும் மாயமாய் மறைந்துவிட்டார். அமெரிக்கப் படைகள் அரிசியில் கல்லெடுப்பதுபோன்று தேடிவருகிறார்கள்.
நானும் சண்டை இல்லை என்று நிம்மதியாக தூங்கி எழும்பி வாழ்க்கையை ஓட்டுகிறேன்.
ஒரு நாள் காலை எனது குளியலறைக்குள் நின்று சவரம்செய்கிறேன். எனது குளியலறை திரைக்குப் பின்னால் ஒருவர் ஒளிந்திருப்பது தெரிந்தது ”யார் நீ” என்று கேட்கிறேன்.
”தோழர்.. நான் தான் Putin. நீங்கள் தான் என்னைக் காப்பாற்றவேண்டும்” என்று காலில் விழுகிறார்.விளடிமீர் பூட்டின்.
அவரே தொடர்ந்தார். நான் அமெரிக்காவில் அசைலம் அடிக்கப்போகிறேன். எனக்கு அமெரிக்காவுக்கு செல்வதற்கு ஒரு பாஸ்போர்ட் தேவை. அதை செய்து தந்தால் நீங்கள் என்ன கேட்டாலும் தருவேன்” என்கிறார்.
அவர் குரல் நடுங்குகிறது. என்னிடம் இருந்த வெட்காவை எடுத்துக் கொடுத்ததேன். மனிதரின் நடுக்கம் குறைந்து சற்றுநேரத்தில் நின்றுபோகிறது.
நான் அவர் உண்மை பேசியதாக நம்புகிறேன். அவர்மேல் பரிதாபம் வருகிறது.
”பாஸ்போட் செய்து தந்தால் என்ன தருவாய் என்று சொல்” என்கிறேன்.
”ஒரு அணுகுண்டும் அதை போடுவதற்கு ஒரு விமானமும் தருகிறேன்” என்கிறார்.
செத்தான்... கோத்தா என்று நினைத்துக்கொள்கிறேன்.
சரி என்று கூறி, எனது பாஸ்போட்டுக்கு தலையை மாற்றிக்கொடுக்கிறேன்.
மாற்றி
எடுப்பதற்கு சில வாரங்கள் ஆகின்றன. அதற்குள் பூட்டின் தமிழ்ச் சாப்பாடுகளை
சாப்பிடவும் சமைக்கவும் கற்றுக்கொள்கிறார். கொத்துரொட்டி போடவும் முடிகிறது அவரால். எனக்கு சாப்பாட்டு பிரச்சனை
தீர்ந்துபோகிறது.ஒஸ்லோவிலதான் அறிமுகமானோம். வாய்க்குள் நூளையாத பெயரைக்கொண்டவன் அவன். பெயர் ஜக். ஆங்கிலத்தில் Jack என்று எழுதுவான்.
இவனுடைய பெயரில் எனக்கு அறிமுகமான ஒரு தம்பி இருந்தான். அவன் நோர்வேக்கு வருவதற்கு அவனது உறவினர்கள் ஒரு நோர்வேஜியப்பெண்ணுக்கு அவனை திருமணம் செய்வதுபோன்று ஒரு திருவிளையாடலை நடத்தியே அழைத்துவந்தனர். தம்பிக்கு அந்தப் பெண்ணைக் கண்டால் கறுத்த முகமும் சிவந்துவிடுமளவுக்கு வெட்கம் வரும். அவள் அவனிடம் இருந்து லட்சங்களை கறந்துகொண்டே இருந்தாள் இவனுக்கு வீசா கிடைக்கும்.வரையில்.
வீசா கிடைத்ததும் தம்பி பேசாமல் இருந்திருககலாம். உறவினர்களுடன் ஏதோ மனஸ்தாபமாகிவிட்டது. நடந்தது பொய்க்கல்யாணம் என்று போலீசுக்கு உறவினர்கள் அறிவிக்க, தம்பி இப்போது இலங்கையில்.
ஆனால் அங்கு அவன் சென்று 4 ஆண்டுகளுக்குள் வக்கீலாக கற்றுத்தேறிவிட்டான். கல்யாணமாகி ஒரு குட்டியும் போட்டிருக்கிறான். இங்கிருந்து ஊர்க்கு செல்லும் உறவினர்கள் அடக்கியயே வாசிப்பதாகவும் கதையுண்டு. எல்லாம் விதி.
கூற வந்ததை மறந்துவிட்டு தம்பியின் கதையை கூறிக்கொண்டிருக்கிறேன். மன்னியுங்கள்.
பல காலங்களின் பின் சந்தித்ததால் நண்பரை எனது மாளிகைக்கு அழைத்துவந்தேன். எனது வசந்தமாளிகையில் சொகுசு இருக்கை ஒன்று கூட இல்லை. இருப்பது ஒரே ஒரு கட்டில். ஆனால் அதை சொகுசு இருக்கையாக மாற்றலாம். மாற்றினேன்.
எனக்கு உணவுதயாரிப்பது என்பது நேரத்தை வீணாக்குவது போன்றது. அந்த நேரத்தை மிச்சப்படுத்தி தூங்கலாம் என்பது எனது நம்பிக்கை. எனவே அவ்வப்போது கடையில் உணவு வாங்குவேன். அல்லது டின் மீன்னையும் பாணையும் சாப்பிட்டுவிட்டு சரிந்துவிடும் மனிதன் நான். இன்று அதிஸ்டவசமாக நண்பரை சந்திப்பதற்கு முன் உணவு வாங்கியிருந்தேன். இறால் நூடில்ஸ். இருவருக்கும் அது காணுமாய் இருக்கலாம் என்று நம்பிக்கை இருக்கிறது. .
பலதையும் பேசி, மிக்சரை கொறித்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்கையில் ஒரு குறுஞ்செய்தி வந்தது.மிக மிக கடுப்பேத்தும் செய்தி. அதற்குப்பின் 100க்கு அதிகமான குறுஞ்செய்திகள் பரிமாறப்பட்டன. அனைத்தும் எறிகணைத்தாக்குதல் போன்றதே. உயிரிழப்பு இல்லாவிட்டாலும் இருபக்கத்திலும் மனச்சேதம். இதையும் பார்த்துக்கொண்டிருந்தான் நண்பன்.
எனது கோபத்தை அவன் நன்கு அறிந்தவன் என்பதால் அவன் சாப்பாட்டில் கவனமாக இருந்தான்.இடையிடையே என்னைப் பார்த்துச் சிரித்தான். எனக்கு அவனைப்பார்த்து சிரிப்பதா, கோபமாகவே இருப்பதா என்று தெரியவில்லை. மரியாதைக்காக தலையை மட்டும் ஆட்டினேன்.
தூக்கம் வருவதுபோலருந்தது. அதற்குப்பின் இன்று மதியம் 13:25வரை இந்த பூலோகத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு நினைவில் இல்லை. ”நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்” படத்தைப் போன்று.
இடையில் ஒரு முறை எழும்பியதாய் நினைவிருக்கிறது. அதன் பின்பும் தூங்கிவிட்டேன்.
இதன் பின்புதான் அந்த உலக அரசியலையே உலுக்கிப்போடும் அந்த மிக முக்கியமான கனவு எனக்கு வந்தது.
நோர்வே www.vg.no என்னும் பத்திரிகை சுவிஸ் நாட்டை ரஸ்யப்படைகள் கைப்பற்றி அங்கிருந்து ஏனைய நாடுகளையும் கைப்பற்றிவருகிறார்கள் என்று செய்தி போட்டிருந்தது.
நான் எனது சுவிஸ் நண்பர்களை நினைத்துக்கொண்டேன். இருவரில் பரிதாபமே வரவில்லை. ஒருவர் கவிஞி மற்றையவர் கடலில் கப்பல் என்று கதை எழுதியவர்.
ஒரிரு நாட்களில் அமெரிக்கப்படைகள் நேட்டோ படைகளுடன் சேர்ந்து சுவிசை மீட்டு எடுக்கின்றன. எனது நண்பர்களான கவிஞியையும், இத்தாலிக்கு கப்பல் விட்டவனும் தப்பிவிடுறார்கள்.
Putinஐ காணவில்லை என்று பத்திரிகைள் எழுதுகின்றன. இணையத்தளங்கள் எங்கே இருக்கலாம் என்று ஊகித்து எழுதுகின்றன. தமிழ் ஊடகங்கள் அவர் இலங்கையில் என்று எழுதுகின்றன.
பூட்டினைக் காணவில்லை. சத்தியமாகக் காணவில்லை. சதாம் உலகத்தைக் கலக்கியது போன்று பூட்டினும் மாயமாய் மறைந்துவிட்டார். அமெரிக்கப் படைகள் அரிசியில் கல்லெடுப்பதுபோன்று தேடிவருகிறார்கள்.
நானும் சண்டை இல்லை என்று நிம்மதியாக தூங்கி எழும்பி வாழ்க்கையை ஓட்டுகிறேன்.
ஒரு நாள் காலை எனது குளியலறைக்குள் நின்று சவரம்செய்கிறேன். எனது குளியலறை திரைக்குப் பின்னால் ஒருவர் ஒளிந்திருப்பது தெரிந்தது ”யார் நீ” என்று கேட்கிறேன்.
”தோழர்.. நான் தான் Putin. நீங்கள் தான் என்னைக் காப்பாற்றவேண்டும்” என்று காலில் விழுகிறார்.விளடிமீர் பூட்டின்.
அவரே தொடர்ந்தார். நான் அமெரிக்காவில் அசைலம் அடிக்கப்போகிறேன். எனக்கு அமெரிக்காவுக்கு செல்வதற்கு ஒரு பாஸ்போர்ட் தேவை. அதை செய்து தந்தால் நீங்கள் என்ன கேட்டாலும் தருவேன்” என்கிறார்.
அவர் குரல் நடுங்குகிறது. என்னிடம் இருந்த வெட்காவை எடுத்துக் கொடுத்ததேன். மனிதரின் நடுக்கம் குறைந்து சற்றுநேரத்தில் நின்றுபோகிறது.
நான் அவர் உண்மை பேசியதாக நம்புகிறேன். அவர்மேல் பரிதாபம் வருகிறது.
”பாஸ்போட் செய்து தந்தால் என்ன தருவாய் என்று சொல்” என்கிறேன்.
”ஒரு அணுகுண்டும் அதை போடுவதற்கு ஒரு விமானமும் தருகிறேன்” என்கிறார்.
செத்தான்... கோத்தா என்று நினைத்துக்கொள்கிறேன்.
சரி என்று கூறி, எனது பாஸ்போட்டுக்கு தலையை மாற்றிக்கொடுக்கிறேன்.
புட்டினை உருமாற்றி ஒஸ்லோ விமனநிலையத்தினூடாக வாஷிங்கடன் அனுப்பியாவிட்டது.
பூட்டின்க்கு சஞ்சயன் செல்வமாணிக்கம் என்ற பெயரில் அமெரிக்காவில் அசைலம் கிடைத்துவிட்டது. அவர் அங்கு ஒரு தமிழ்க்கடையில் கொத்துரொட்டி போடுகிறார். அவரின் ரொட்டி வீசும் அழகில் மயங்கி வாஷிங்டன் நகரத்து மக்கள் தமிழக்கடைக்கு வெளியே காத்துக்கிடக்கிக்கிறாாகள். "பூட்டின் ரொட்டீ" அங்கு மிகப் பரபலமாகிறது.
பூட்டின் எனக்குக் கொடுத்த வாக்கினை காப்பாற்றிவிட்டார். இப்போது என்னிடம் ஒரு அணுகுண்டும் ஒரு விமானமும் உணடு. ஆனால் விமானி இல்லை.
அணுகுண்டை ராஜபக்சேயின் கட்டிலுக்கு நேரே போடுவது என்று முடிவெடுக்கிறேன். நேற்று என்னைச் சந்தித்த நண்பரை விமானியாக அழைப்போம் என்று நினைத்தபடியே அவனுக்கு தொலைபேசுகிறேன்.
ரிங் போகிறது.
”யெஸ் ... Danielsஇன் மகன் Jackபேசுகிறேன்” என்றார் நண்பர்....
கனவு கலைந்துவிட்டது.
கனவு உண்மை. சாமி சத்தியமாக உண்மை
சற்று வெங்காயம் தாளித்து போட்டிருக்கிறேன் வாசனைக்காக.. அவ்வளவுதான்
கோவிக்காதீர்கள்.
பூட்டின்க்கு சஞ்சயன் செல்வமாணிக்கம் என்ற பெயரில் அமெரிக்காவில் அசைலம் கிடைத்துவிட்டது. அவர் அங்கு ஒரு தமிழ்க்கடையில் கொத்துரொட்டி போடுகிறார். அவரின் ரொட்டி வீசும் அழகில் மயங்கி வாஷிங்டன் நகரத்து மக்கள் தமிழக்கடைக்கு வெளியே காத்துக்கிடக்கிக்கிறாாகள். "பூட்டின் ரொட்டீ" அங்கு மிகப் பரபலமாகிறது.
பூட்டின் எனக்குக் கொடுத்த வாக்கினை காப்பாற்றிவிட்டார். இப்போது என்னிடம் ஒரு அணுகுண்டும் ஒரு விமானமும் உணடு. ஆனால் விமானி இல்லை.
அணுகுண்டை ராஜபக்சேயின் கட்டிலுக்கு நேரே போடுவது என்று முடிவெடுக்கிறேன். நேற்று என்னைச் சந்தித்த நண்பரை விமானியாக அழைப்போம் என்று நினைத்தபடியே அவனுக்கு தொலைபேசுகிறேன்.
ரிங் போகிறது.
”யெஸ் ... Danielsஇன் மகன் Jackபேசுகிறேன்” என்றார் நண்பர்....
கனவு கலைந்துவிட்டது.
கனவு உண்மை. சாமி சத்தியமாக உண்மை
சற்று வெங்காயம் தாளித்து போட்டிருக்கிறேன் வாசனைக்காக.. அவ்வளவுதான்
கோவிக்காதீர்கள்.
ஹா ஹா..
ReplyDeleteஅண்ணே ஒரு பிளேட் வெங்காயப் பொரியல் ப்ளீஸ்..
ReplyDelete