நேற்றிரவு, அம்மாவுக்குத் தெரியாமல் Raspberry Flavored அருந்திவிட்டு, மோகன், நதியாவை நோக்கி ”மலையோரம் வீசும் காற்று” என்று பாடுவதை கேட்டபடியே, காற்றில் நடந்துகொண்டிருந்தேன்.
கணிணி சிணுங்கியது..
”அண்ணை ஸ்கைப்புக்கு வாங்கோ”, என்றான்” பேரன்புக்குரிய தம்பியொருவன்.
”இல்லையப்பு, அண்ணை கன நாளைக்கு பிறகு மந்தகாரமான மூட்ல இருக்கிறன்” என்றேன்
”அண்ணை விளையாடாதீங்க, முக்கியமான விடயம் கதைக்கணும், உடனவாங்க” என்றான்.
”நதியா பாடுறாள் பார்க்கவிடுடா” என்றேன்.
”You tube எங்கயும் போகாது, அது அங்கதான் இருக்கும். அதைவிட நீங்க நதியாவ பார்த்து உங்கட நெஞ்சு நிண்டுபோனால்... ” என்று பயமுறுத்தினான்.
ஸ்கைப்ல வந்தான்.
கதைத்தான்.
நானும் கதைத்தேன். என் முகத்தில் சற்று காற்று படப் பட நான் என்ன கதைத்தேன் என்பதோ, அன்புத் தம்பி என்ன கதைத்தான் என்பதோ, நதியாவுக்கு என்ன நடந்தது என்பதோ எல்லாமே காற்றில் எழுதியதுபோலாகியது.
Raspberry Flavoredஉம், கருவாட்டுப்பொரியலும் முடிந்து, வதக்கிய வெங்கயமும் முடிந்தபோது, நான், மேகங்களுக்குள் நடக்கும் ஆற்றலையும், ஒரு பொருள் இரண்டு, முன்றாகத் தெரியும் ஆற்றலையும் பெற்றிருந்தேன்.
தம்பியானவன், புத்தகம் சமுகம் வாசிப்புபற்றி எதையோ படு சீரியசாக சொன்னான் என்றே நினைக்கிறேன். நானும் அவன் பாடுகிறான் என்று நினைத்தபடியே அப்படியே அயர்ந்துவிட்டேன்.
தம்பி அயரவில்லை. அவன் அயரக்கூடிய ஆளுமில்லை.
இடையிடைய அண்ணை, அண்ணை என்று 10 முறை அழைப்பான். நான் 10வது முறை சற்று நனைவுதிரும்பி ” ம்... ம்” என்பேன்.
”அண்ணை முக்கியமாக விசயமண்ணை, கேளுங்கோண்ணை, வடிவாகக் கேளுங்கோ அண்ணை” தம்பி என்பான்.
நான் ம்..ம் என்றுவிட்டு என்னையறியாமலே தூங்கிவிடுவேன்.
இரவு 2 மணிபோல், திடீர் என்று நினைவுதிரும்பியபோது, என்னடா கணிணி குறட்டை விடுகிறதே என்று பார்த்தேன்.
ஸ்கைப் இயங்கிக்கொண்டிருந்தது.
மறுபக்கத்தில் தம்பி களைத்து தூங்கியிந்தான் இருந்தான்.
மன்னித்துக்கொள் ராசா!
எல்லாம் Raspberry Flavored திருவிளையாடல்..
யாவும் கற்பனையல்ல.
”அண்ணை விளையாடாதீங்க, முக்கியமான விடயம் கதைக்கணும், உடனவாங்க” என்றான்.
”நதியா பாடுறாள் பார்க்கவிடுடா” என்றேன்.
”You tube எங்கயும் போகாது, அது அங்கதான் இருக்கும். அதைவிட நீங்க நதியாவ பார்த்து உங்கட நெஞ்சு நிண்டுபோனால்... ” என்று பயமுறுத்தினான்.
ஸ்கைப்ல வந்தான்.
கதைத்தான்.
நானும் கதைத்தேன். என் முகத்தில் சற்று காற்று படப் பட நான் என்ன கதைத்தேன் என்பதோ, அன்புத் தம்பி என்ன கதைத்தான் என்பதோ, நதியாவுக்கு என்ன நடந்தது என்பதோ எல்லாமே காற்றில் எழுதியதுபோலாகியது.
Raspberry Flavoredஉம், கருவாட்டுப்பொரியலும் முடிந்து, வதக்கிய வெங்கயமும் முடிந்தபோது, நான், மேகங்களுக்குள் நடக்கும் ஆற்றலையும், ஒரு பொருள் இரண்டு, முன்றாகத் தெரியும் ஆற்றலையும் பெற்றிருந்தேன்.
தம்பியானவன், புத்தகம் சமுகம் வாசிப்புபற்றி எதையோ படு சீரியசாக சொன்னான் என்றே நினைக்கிறேன். நானும் அவன் பாடுகிறான் என்று நினைத்தபடியே அப்படியே அயர்ந்துவிட்டேன்.
தம்பி அயரவில்லை. அவன் அயரக்கூடிய ஆளுமில்லை.
இடையிடைய அண்ணை, அண்ணை என்று 10 முறை அழைப்பான். நான் 10வது முறை சற்று நனைவுதிரும்பி ” ம்... ம்” என்பேன்.
”அண்ணை முக்கியமாக விசயமண்ணை, கேளுங்கோண்ணை, வடிவாகக் கேளுங்கோ அண்ணை” தம்பி என்பான்.
நான் ம்..ம் என்றுவிட்டு என்னையறியாமலே தூங்கிவிடுவேன்.
இரவு 2 மணிபோல், திடீர் என்று நினைவுதிரும்பியபோது, என்னடா கணிணி குறட்டை விடுகிறதே என்று பார்த்தேன்.
ஸ்கைப் இயங்கிக்கொண்டிருந்தது.
மறுபக்கத்தில் தம்பி களைத்து தூங்கியிந்தான் இருந்தான்.
மன்னித்துக்கொள் ராசா!
எல்லாம் Raspberry Flavored திருவிளையாடல்..
யாவும் கற்பனையல்ல.
அண்ணே !!!!!!
ReplyDelete