போதைக்கும் போதிக்கும் கவிதைகள்

இன்றும் ஏனைய நாட்களைப் போல் நிலக்கீழ் தொடரூந்தில் இருந்து இறங்கி ”ட்ராம்ப்” தரிப்பிடத்தை நோக்கி எனது கால்கள் அனிச்சையாக நடந்து கொண்டிருந்தன. நிலக்கீழ் தொடரூந்து நிலயத்தால் வெளியே வந்ததும் அருகில் படிக்கட்டுகளும் படிக்கட்டுகளுக்கு அருகில் பேருந்து தரிப்பிடமும் அதற்கருகில் ”ட்ராம்ப்” தரிப்பிடமும் உண்டு.

இந்தப் படிக்கட்டிலும், அதனருகிலும் போதைவஸ்துக்களுக்கு அடிடையான மக்கள் பலர் எப்போதும் கூடியிருப்பர். எனவே எப்போதும் அந்த இடத்தை பலரும் தவிர்க்கவே விரும்புவர். நானும் அப்படித்தான். அந்த அடம் என்றால் ஒரு வித அசூயை உணர்வேன்.

எத்தனையோ மனிதர்களின் வாழ்வு இந்த இடத்தில் பாழாகிக்கொண்டிருக்கிறது. பல வெளிநாட்டவர்களும், வயது குறைந்தவர்களும் இவர்களுக்குள் அடக்கம்.

இன்று அந்த இடத்தைக் கடந்த போது பலர் ஒரு இடத்தில் கூடி ஏதோ ஒன்றை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. யாரும் ”ஓவர்டோஸ்” எடுத்து மயங்கி விழுந்திருப்பார்களோ என நினைத்தேன். ஆனால் சுற்றியிருந்தவர்களின் புன்னகையும், பாராட்டு வார்த்தைகளும் என்னை அங்கு கொண்டுபோயிற்று.

நானும் எட்டிப் பார்த்தேன். எப்போதும் இல்லாதவாறு அந்தச் சுவர் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த அலங்காரம் குழந்தைகளால் செய்யப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. குழந்தைக‌ளின் கைவண்ணத்தில் பூக்களும், வண்ணாத்திப்பூச்சிகளும் அழகழகான வண்ணத்தில் வரையப்பட்டும், உருவங்கள் அழகழகாக கத்தரிக்கப்பட்டும் அங்கு ஒட்டப்பட்ருந்தது. இடையிடையே வாழ்வினை போதிக்கும் கவிதைகளும் காணப்பட்டன. அங்கு பார்வைக்கு வைக்கப்பட்ட கவிதைகள் ‌நோர்வேயின் பிரபல கவிஞராக கருத்படும் Hans Børli என்பவரின் கவிதைகளாகவே இருந்தன.

Hans Børli இன் கவிதைகள் மிகவும் ஆழ்ந்த கருத்துக்களுடையவை. என்னிடம் ‌ அவர் எழுதிய ஒரு புத்தகம் உண்டு. எனக்குள் மொழி பெயர்ப்பு ஆசை வந்திருந்த நாட்களில் அதில் இருந்து சில கவிதைகளை மொழிபெயர்க்க முயற்சித்த போது எனக்கு அந்த தகுதி இல்லை என்பதை மிக விரைவிலேயே கண்டு கொண்டேன். என்னால் அக் கவிதைகளை மொழிபெயர்க்க முடியவில்லையே என்பதை விட இன்றும் அக் கவிதைகள் உண்மையான அர்த்தத்துடன் நோர்வேஐிய மொழியிலேயே இருப்பது என்க்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

காலையில் அவரின் கவிதைகளை வாசிக்க முடியவில்லை. மாலை அதை வாசிப்போம் என்று போனேன். அங்கு அவரின் அழகான கவிதைகள் இருக்கவில்லை மாறாக இருண்ட உலகத்தின் மனிதர்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.



இந்த பதிவில் உள்ள படம் Marie K Kvisberg என்னும் சிறுமியினால் வரையப்பட்டது.



.
.

1 comment:

  1. புதுமை பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

பின்னூட்டங்கள்