2. - பொன்னையா

முதலில் ஞாபகம் வருபவர் பொன்னையா, அப்பாவின் நண்பரா அல்லது அவ்வப்போது உதவி செய்ய வருபவரா என்பது ஞாபகமில்லை. பீடி பிடிப்பார், மெலிந்த உடம்பு, அடிக்கடி இருமுவார், அவரின் சைக்கிலைத்தான் அப்பா வாங்கியதாக ஞாபகம். பட்டம் கட்டித் தருவார், சைக்கிலில் ஏற்றித் திரிவார்.

இவருடன் காளி கோயிலுக்கு போய் வந்த ஞாபகங்கள் உண்டு. காளி கோயிலில் உரு ஆடுபவர்களை பார்த்தால் பயமாய் இருக்கும் ஆனால் பொன்னையாவின் கையைப்பிடித்திருந்தால் பயம் குறைந்து, துணிந்து அவர்களைப் பார்க்கலாம். உரு ஆடுபவர்கள் வாழைப்பழம் தீத்த கூப்பிட்டால் பொன்னையா வந்தால் தான் போவேன். இல்லா என்றால் பயத்தில் தொண்டை வறண்டுவிடும்.

உரு ஆடுபவர்களை அருகிலிருந்து பார்த்திர்க்கிறீர்களா? ருத்ரம், ஆவேசம், குருரம், வேகம், அன்பு ஆகியவை கலந்து செய்யப்பட்ட கலவையாக காணப்படுவார்கள். (அந்த நேரத்தில் மட்டும்) 1980 களில் சிங்களவர்களும், இஸ்லாமியர்களும் கூட உரு ஆடியதைக் கண்டிருக்கிறேன்.

மீண்டு வருமா அந்தப் பொற்காலம்……?

வரலாம்…

இல்லை, இல்லை.. வர விடமாட்டார்கள், மனிதம் மறந்த மனிதக்கூட்டம்.

அன்பான பொன்னைவுக்கு 80களில் ஒரு அழகிய பேத்தி இருக்கப்போகிறாள் என்றும், 1980 களில் அவளாள் என்ளைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றம், உலகம் அர்த்தப்படும், ராத்திரியின் நீளம் விளங்கும்,உனக்கும் கவிதை வரும்…உன் கையெழுத்து அழகாகும்… இப்படி வைரமுத்து சொல்லும் இரசாயன மாற்றங்கள் நடந்த விடயங்களை பின்பு பார்ப்போம்.

இவருக்கும் எங்களுடன் வாழ்ந்த ஏம்மிக்கும் எட்டாப் பொருத்தம். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூட மாட்டார்கள். எம்மி பொன்னையாவை கண்டால் திட்டிக் கொண்டே இருக்கும். ஏன் என்பது இன்று வரை புரியாத ஒரு புதிர்............ புரியாமலே இருக்கட்டும்.

அப்பாவின் இறுதிக்கிரிகைகளின் போது வீட்டின் ஒரு ஓரத்தில் நின்றிருந்தார்.

விடலையாய் சுற்றிய காலத்தில் அப்பாவின் மரணத்தின் பின் சில நோங்களில் அவருடன் உரையாடும் போது தான் சுகயீனமாய் உள்ளதாக கூறிய ஞாபகம் உண்டு.

வெளிநாடு வந்து சில வருடங்களில் அவர் இறந்த செய்தி கிட்டியது. எமக்குள் நெருங்கிய தொடர்புகள் இல்லாவிடினும், ஏனோ என் நினைவுகளில் அவர் ஒரு மறக்க முடியாத பாத்திரம்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்